உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார்?

வடமாகாண முதலமைச்சரும் இலங்கை
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற அதே கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கூறியிருப்பது தமிழர் அரசியல் கழத்தில் புதிய போர்முனை ஒன்றை திறந்து விட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ள நிலையில் சுமந்திரனையே கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் கண்டனக்குரல்களும் பெருவாரியாக வெளிவரத்தொடங்கியுள்ளன. வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தும் சுமந்திரன் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா? அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமளவிற்கு சுமந்திரன் எம்பி நியாயமானவரா? என்பது தொடர்பில் கேள்விக்கணைகள் தொடுக்கப்படுகின்றன.

இலங்கை தமிழரசு கட்சிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாகவிருந்த முரண்பாடுகள் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற சுமந்திரன் அங்குள்ள வானொலி ஒன்றிற்கு வழங்கிய பேட்டி மூலம் தீப்பிழம்பாகியுள்ளது. 

முதலமைச்சர்மீது சுமந்திரன் எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் இவைதான்

1. முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இந்த பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாணசபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சி கொடுத்திருக்கின்றது. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில்போது கட்சிக்கு சார்பாக அவர் செயற்படாமையே எமக்கும் அவருக்கும் இடைவெளி உருவாகக்காரணம்.

2. தேர்தலுக்காக நிதிதேவை கனடா சென்ற அதனைப் பெற்றுவாருங்கள் என்று அவரிடம் கேட்டிருந்தோம். ஏனெனில் வடமாகாணசபைத் தேர்தலின்போது நானும் சம்பந்தனும் கனடா சென்று நிதி உதவிகளைப்பெற்று வந்தோம். இந்த தடவை நாங்கள் போகமுடியாது நீங்கள் அதனை செய்யுங்கள் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாது முழங்கால் வலி என்று தெரிவித்தார்.

3.ஆனால் அதே காலகட்டத்தில் அவர் அமெரிக்கா சென்றார் அப்போது அமெரிக்கா செல்கிறீர்கள் ஐயா ஒரு மணிநேரம் கனடாவிற்கு சென்று வாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு நேரமில்லை என்று சொல்லி தட்டிக்கழித்துவிட்டார். அதன் பின்னர்தான் தெரிந்தது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட மனமில்லாமல் கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தார். நடுநிலையாக இருக்கப்போகின்றேன்,ஊமையாக இருக்கப்போகின்றேன் என்றார். எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அடையாளம் காட்டுகின்றபோது தெளிவாக மாற்று கட்சியை சுட்டிக்காட்டி அறிக்கை விட்டிருந்தார். எந்தகட்சியும் தனது உறுப்பினர் இவ்வாறு செய்வதற்கு அனுமதிக்காது. முதலமைச்சராக இருக்கலாம் இளைப்பாறிய நீதிபதியாக இருக்கலாம் இந்த விடயத்தில் கட்சியிலிருந்து நீக்குமாறு தனிப்பட்ட முறையில்நான் கேட்டிருக்கின்றேன்.

4. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எங்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் இருவர் மக்களை நடுநிலை வகிக்கச்சொன்னார்கள்.கட்சியின் மகளீரணிச்செயலாளரும் இளைஞரணிச் செயலாளரும் அப்படிச் செய்தமைக்காக அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தோம். எமது கட்சி போட்டியிடாத அந்த தேர்தலில் வேறொருவருக்கு வாக்களிக்குமாறு கட்சி எடுத்த தீர்மானத்திற்குஅவர்கள் நடுநிலை வகிக்கச்சொன்னதற்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அப்படியிருக்கும்போது எமது கட்சி போட்டியிட்ட பிரதானமான இந்தத் தேர்தலில் இவர் இந்தமாதிரிச் செயற்பட்டமை கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் கூட ஒரு நீதியில்லாத செயற்பாடு என்பது எனது நிலைப்பாடு. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டு பாரபட்சமாக இவருக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கட்சி தங்களுடைய உறுப்பினர்களுக்கு செய்கின்ற மரியாதைக்குறைவு என்பது என் கருத்து. இதனை நான் கட்சியிடம் சொல்லியிருக்கின்றேன். ஆனால் கட்சி இதுவரை அதனை செய்யவில்லை. விரைவில் அதனை செய்தே ஆகவேண்டும்.


சுமந்திரனின் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா?


சுமந்திரனின் இக்குற்றச் சாட்டுக்கள் நியாயமானவையா? முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கிய ஒருவன் என்று சுமந்திரன் கூறுவது தவறு. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கருத்து பலம் பெற்ற நிலையிலும் அதற்கு பொருத்தமான ஒருவர் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளிடம் இல்லாத நிலையிலுமே விக்னேஸ்வரனை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிலும் இவ்விடயத்தை விக்னேஸ்வரனிடம் கொண்டு சென்ற போது அவர் கூறிய நிபந்தனை; ‘எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. அவ்வாறு வந்துதான் ஆக வேண்டுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றாக வந்து கேட்டால்தான் வருவேன்‘ இதனையடுத்து பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த அழைப்பை ஏற்றே விக்னேஸ்வரன் வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிற்க இணங்கினார். எனவே விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியதாக எவரும் தனித்து உரிமை கோரமுடியாது.

அத்துடன் விக்னேஸ்வரன் பங்காளிக் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவானவர். தசது கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டுமென் தற்காகவே தமிழரசுக் கட்சி தன்னுடன் விக்னேஸ்வரனை இணைத்தது. அடுத்ததாக நிதி உதவி பெற்றுத்தரவில்லையென்ற குற்றச்சாட்டு. புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருக்கே நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் சென்று நிதிஉதவியைப் பெற்று அதனை தமது கட்சிக்கு மட்டும் பயன்படுத்த முதலமைச்சரின் மனம் ஒத்துழைத்திருக்காது.

ஏற்கனவே பெறப்பட்ட பணங்களுக்கு என்ன நடந்தது என்பது முதலமைச்சருக்கு தெரியாதிருந்திருக்கும். அதனால் கூட அவர் செல்ல மறுத்திருக்கலாம். அதுமட்டுமன்றி நிதி உதவி கோரி தான் சென்றால் தன்னை நம்பி புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு உதவி செய்வார்கள். ஆனால் அந்த நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்நிதி உதவுமா அல்லது தமிழரசுக் கட்சியின் நலன்களுக்கு மட்டும் உதவுமா என்ற சந்தேகம் முதலமைச்சருக்கு இருந்திருக்கலாம்.

ஏனெனில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியிலேயே அனைத்து விடயங்களையும் முன்னெடுக்கிறார். கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டதான குற்றச்சாட்டு. முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தமிழரசுக் கட்சிக்கு சார்பாக மட்டும் பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்யுமாறு கட்சித் தலைமையால் கோரப்பட்டது. அதனால்தான் அவர் உடன்படவில்லையென முதலமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பங்காளிக் கட்சிகளின் ஆதரவு மூலம் முதலமைச்சரான நான் எவ்வாறு இத்தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழரசுக் கட்சிக்கு மட்டும் வாக்களிக்கக் கோருவது? இதுநான் பங்காளிக் கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என முதலமைச்சர் நினைத்திருக்கலாம். அத்துடன் அவர் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் மக்கள் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரியதில் என்ன தவறு? தமிழ் மக்களின் நன்மைக்காகத்தானே கேட்கிறார்.

இந்தத் தகுதிகள் தமது கட்சியில் இல்லையென நினைத்து முதலமைச்சர் மாற்றுக் கட்சியை அடையாளம் காட்டிவிட்டாரென சுமந்திரன் தொப்பியைப் போட்டுக் கொள்வதற்கு முதலமைச்சர் எப்படி பொறுப்பாகமுடியும்? இதேவேளை முதலமைச்சர் இந்த அறிக்கை தொடர்பாக அப்போது கருத்து வெளியிட்ட சுமந்திரன், மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தாம் அனைவருக்கும் பொதுவானவர் எனவும் தாம் தமிழரசுக் கட்சியை சார்ந்தவர் என்றபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளமையினால் தனியே எந்தவொரு வேட்பாளருக்கும் இயங்க முடியாத நிலையில் தாம் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற வகையில் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இது அவருடைய நிலைப்பாடு. இதற்கு அவரே பொறுப்பானவர். அவரின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கின்றோம் அவரின் இந்த நிலைப்பாடு மற்றைய கட்சிகளுக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கின்றதென்றோ கூட்டமைப்பின் வெற்றியை அந்த நிலைப்பாடு பாதிக்கும் என்றோ நாங்கள் கருத முடியாது. அவரின் நிலைப்பாடு கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்காது. தமிழ் மக்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கே வாக்களிப்பார்களே தவிர தனிநபர்களுக்கு வாக்களிப்பது கிடையாது. முதலமைச்சரின் நிலைப்பாட்டை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்த முடியும்.

அதற்காக முதலமைச்சரின் நிலைப்பாடு பிழை என்றோ முதலமைச்சர் பிழையானவர் என்றே அர்த்தம் கொள்ள முடியாது. அத்துடன் அவர் கட்சியை மீறி நடக்கவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவர் என்பதால் பிரசாரமேடைகளில் ஏறவில்லை. அதேபோன்று விக்னேஸ்வரனும் எல்லோருக்கும் பொதுவானவர். இதில் பிழை இல்லை. என்று கூறியதும் அது ஊடகங்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மகளிர் அணிச் செயலருக்கும் இளைஞர் அணிச் செயலருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துவிட்டு முதலமைச்சருக்கு மட்டும் எடுக்காமல் இருக்க முடியாதென சுமந்திரன் எப்படி வாதிடமுடியும்? மேற்குறிப்பிட்ட இரு செயல்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையில் நியாயம் இருக்கின்றதா இல்லையா என்பதை யாரிடம் கேட்பது? இரு தவறுகளை செய்து விட்டோம் என்பதற்காக மூன்றாவது தவறையும் செய்ய வேண்டும் என்பது போன்றே சுமந்திரனின் வாதம் உள்ளது.

ஏனெனில் தமிழரசுக் கட்சியில் சர்வாதிகாரம் தானே உள்ளது. அடுத்ததாக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன். அதாவது விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கவேண்டும். அவரிடம் விளக்கம் கேட்க வேண்டுமென நான் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கின்றேன். கட்சி அதைச் செய்தே ஆகவேண்டும் என்றும் சுமந்திரன் கூறுகிறார்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவோ வடக்கு மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்திருக்கின்றேன். முதலமைச்சரை நீக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சி எந்தவித தீர்மானத்தையும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறான கருத்து வந்தால் அது தொடர்பில் கட்சி ஆராயும். அவ்வாறான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாம் சிந்திக்கவே இல்லை. சுமந்திரனின் இக்கருத்து தொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்கிறார்.

அப்படியானால் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டுமென சுமந்திரன் வலியுறுத்தியது யாரிடம்? தமிழரசுக் கட்சியின் தலைவரே விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகக் கூறுகின்றார். ஆனால் சுமந்திரனோ கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியதாகக் கூறுகின்றார். அப்படியானால் சுமந்திரனின் கட்சித் தலைமை யார்? இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் வடக்கு முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அவ்வாறு எவரேனும் கூறியிருந்தால் அதுதவறு. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் வெளியிட்ட சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் தொடர்பான சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அது தொடர்பில் நாம் இன்னும் அவருடன் பேசவில்லை. ஆனால் பேச இருக்கின்றோம் என்கிறார். பொதுத் தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களாகின்ற நிலையிலும் அது தொடர்பில் இன்றுவரை தமிழரசுக் கட்சியால் ஏன் விக்னேஸ்வரனுடன் பேசமுடியவில்லை? நேரமின்மையா? நியாயமின்மையா? தயக்கமா என்பதை சம்பந்தன்தான் வெளியிட வேண்டும்.  

இதேவேளை விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கக்கோரும் அதிகாரம் சுமந்திரனுக்கு கிடையாது. விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்கலாமே தவிர சுமந்திரனுக்கு உரிமை கிடையாதென பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அத்துடன் சுமந்திரன் இவ்வாறு கூறியமை தொடர்பில் சுமந்திரன் மீது தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும் முன்வைத்துள்ளார். விக்னேஸ்வரன் தொடர்பான சுமந்திரனின் கருத்தை கவனத்தில் எடுத்தால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென்ற சுமந்திரனின் வலியுறுத்தல் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் பொது அமைப்புக்களையும் சினம் கொள்ள வைத்துள்ளது. தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் என்று கூறிக் கொண்டு சுமந்திரன் தான்தோன்றித்தனமாக வெளியிடும் கருத்துக்களால் ஏற்கனவே கொதித்துப் போயுள்ள மக்களை விக்னேஸ்வரன் மீதான சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கள் மேலும் சீண்டியுள்ளன.

எனவே தற்போது வெளிநாடுகளில் சுமந்திரனுக்கு சுதந்திரமாக நடமாடமுடியதா நிலை ஏற்பட்டது போல் இங்கும் வட, கிழக்கில் ஏற்படலாமென அவரின் கட்சிக்காரர்களே கூறுகின்றனர். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆப்பு வைக்க வேண்டுமென துடியாய் துடிக்கும் சுமந்திரன்தான் தற்போது அதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவிட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளார்.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தாய் கட்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதால், அதில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களை அவர் மதிப்பதால் சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்கள் வாளாதிருக்கக் கூடாது என்பதுடன் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. அதேவேளை விக்னேஸ்வரன் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிவிட்டார் எனக் கொதிக்கும் சுமந்திரன் தனது தமிழரசுக்கட்சியின் தலைமையை ஒரு பொருட்டாகவே கருதாது தமிழரசுக் கட்சி சார்பாக தான்தோன்றித்தனமாகவும் விஷமத்தனமாகவும் தமிழினத்தை கேவலப்படுத்தும் வகையிலும், தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதுடன் அவரின் இவ்வாறான கட்சிக்கும்,

கட்சிக் கொள்கைக்கும் கட்டுப்படாத செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படுவது அவசியம். இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் வெளியேறி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். எனவே தமிழரசுக் கட்சி தலைமை சுமந்திரனா, தமிழ் மக்களின் பலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் தமிழரசுக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.

25 வருடங்களாக வீதியில் நிற்கும் மக்களை மீள்குடியேற்றாத அரசு தீர்வை முன்வைக்குமா? - யாழ்.ஆயர் கேள்வி

புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி அர­சியல் தீர்வு கொண்டு வரப்­படும் என அர­சாங்கம் கூறு­கின்­றது. கடந்த 25 வரு­டங்­க­ளாக வடக்கில் இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை மீளக்­கு­டி­யேற்ற தயக்கம் காட்டும் இந்த அர­சாங்கம் தீர்­வைக்­கொண்டு வரு­மென எவ்­வாறு நம்ப முடியும் என யாழ். மாவட்ட புதிய ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் கேள்வி எழுப்­பினார்.

அண்­மையில் யாழ். மாவட்ட ஆய­ராக பொறுப்­பேற்­றுக் ­கொண்ட வண.கலா­நிதி ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் அவர்­க­ளிடம் வட­ப­குதி மக்கள் படும் இன்­னல்கள் அர­சியல் சூழ்­நி­லைகள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பி கேள்விக்கே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

கடந்த கால் நூற்­றாண்டு கால­மாக இடம்­பெ­யர்ந்த மக்கள் தெருவில் நின்று கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு புதிய அர­சாங்கம் இது­வரை தீர்­வைக்­கா­ண­வில்லை. இவ்­வாறு இருக்­கும்­போது புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்கி தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று விரைவில் காணப்­ப­டு­மென அர­சாங்கம் கூறு­வதை எப்­படி தமிழ் மக்கள் நம்ப முடியும்? இதே­போன்­ற­தொரு நிலைதான் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­கா­ரத்­திலும் காணப்­ப­டு­கின்­றது.

இது ஒரு­பு­ற­மி­ருக்க தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளி­டமோ அர­சி­யல்­வா­தி­க­ளி­டமோ ஒற்­று­மை­யில்லை. ஒரு கூட்­டுப்­போக்­கில்லை. இவ்­வா­றா­ன­தொரு சம­மற்ற சூழ்­நி­லையில் அர­சியல் தீர்வு, கிடைக்கும் சுபீட்­ச­மான எதிர்­காலம் தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­கு­மென எதை வைத்து நம்ப முடியும்.

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்த கால­மாக பட்ட துன்­பங்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வொன்று காணப்­பட வேண்டும். அந்த தீர்வு அர­சியல் ஸ்திரம் கொண்­ட­தாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் எப்­போதும் பிரிந்து வாழ எண்ணம் கொண்­ட­வர்கள் அல்லர். ஒரு தேசத்­துக்குள் ஒன்று சேர்ந்த மக்­க­ளா­கவே வாழ விரும்­பு­கின்­றார்கள். ஆனால் இந்­நாட்டில் ஏனைய சமூ­கத்­தவர் எத்­த­கைய உரி­மை­களை கொண்­ட­வர்­க­ளாக வாழு­கின்­றார்­களோ அதே­போன்று சகல உரி­மை­களைப் பெற்­ற­வ­ராக மதிப்­பு­டனும் கௌர­வத்­து­டனும் வாழக்­கூ­டிய ஓர் அர­சியல் தீர்­வொன்­றையே வேண்டி நிற்­கின்­றனர். தமிழ் மக்கள் தங்­க­ளுக்­கு­ரிய நீதி­யான நிரந்­த­ர­மான தீர்வை அர­சியல் வடிவில் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நீண்ட கால­மாக போராடி வந்­துள்­ளனர் என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

தற்­போது அவர்கள் எதிர்­பார்ப்­ப­தெல்லாம் நியா­ய­மா­னதும் நீதி­யு­மா­ன­து­மான ஒரு தீர்­வாகும். அந்த தீர்வை கொண்டு வரு­வ­தற்கு உரிய சாச­னங்­களை வரைந்து சட்­டங்­களை இயற்றி சகல இனங்­களும் ஒற்­று­மை­யாக வாழும் சூழ்­நி­லை­யொன்றை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் உண்­டாக்கி கொடுக்க வேண்டும். இன்னும் புரி­யும்­படி சொல்­வ­தானால் சிங்­கள மக்­களை தமிழ் பேசும் மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்­களை பெரும்­பான்மை சிங்­கள மக்கள் கௌர­வ­மாக நடத்த வேண்டும். இவ்­வகை சூழ்­நி­லையே சிறந்த நல்­லி­ணக்­க­மாக இருக்க முடியும். இத்­த­கை­ய­தொரு நற்­சூ­ழலை கொண்டு வரும் அர­சியல் தீர்­வையே தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

இதி­லுள்ள தர்­ம­சங்­க­ட­மான நிலை­யென்­ன­வென்றால் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அர­சியல் தீர்­வொன்றை சிங்­க­ளத்­த­லை­வர்கள் கொண்­டு­வர முயற்சி எடுப்­பார்­க­ளானால் சிங்­கள மக்கள் மத்­தியில் தங்­க­ளுக்­கு­ரிய செல்­வாக்கு இல்­லாமல் போய்­விடும் என்ற அவர்­களின் அச்­ச­மாகும்.

இன்­றைய அர­சாங்­கத்தை பொறுத்­த­வரை மக்கள் எதிர்­பார்த்த அள­வுக்கு ஒன்றும் நடை­பெ­ற­வில்­லை­யென்ற அதி­ருப்­தியே காணப்­ப­டு­கி­றது. சகல விட­யங்­க­ளிலும் இழுத்­த­டிப்பே காணப்­ப­டு­கி­றது. மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாமல் யாழ். மாவட்­டத்தில் வலி­காமம், காங்­கே­சன்­துறை, பலாலி, மயி­லிட்டி, ஊறணி பிர­தேச மக்கள் கடந்த 25 வரு­டங்­க­ளாக தெரு­வில்தான் நிற்­கி­றார்கள். இவர்­க­ளுக்கு ஒரு தீர்வை வழங்க முடி­யாத அர­சாங்கம் அர­சியல் தீர்­வொன்றை எப்­படி வழங்­கப்­போ­கி­றது என்­பது சந்­தேகம் தரு­கின்ற விட­யமே.

வடக்­கி­லுள்ள மக்கள் 34 இடைத்­தங்கல் முகாம்­களில் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் பலர் வெளி­யேயும் தங்கி இருக்­கி­றார்கள். இவர்கள் குடி­யேற்­றப்­பட வேண்­டி­ய­வர்கள். ஆனால் புதிய அர­சாங்கம் இது சம்­பந்­த­மாக முயற்சி எடுப்­பதை எம்மால் காண முடி­ய­வில்லை. பெருந்­தொ­கை­யான காணி­களில் இரா­ணுவ முகாம் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. இவை இன்னும் தேவையா? என்ற கேள்­வி­யையே கேட்க வேண்­டி­யுள்­ளது.

1976ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து நான் இப்­ப­கு­தி­களில் சேவகம் செய்­தவன். மக்கள் எப்­படி வாழ்ந்­தார்கள் என்­ப­தையும் நான் நன்­றாக அறிவேன். அப்­ப­டிப்­பட்ட மக்­களை கால்­நூற்­றாண்­டுக்கு மேலாக தெருவில் நிறுத்தி வைத்­துக்­கொண்டு இன்­னு­மொரு தீர்­வையும் வழங்­காத இந்த அர­சாங்­கத்தை நாங்கள் எப்­படி நம்­பு­வது, தமிழ் மக்­களால் எப்­படி நம்ப முடியும்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் சர்­வ­தே­சமும் பல்­வேறு ராஜ­தந்­தி­ரி­களும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வொன்று முன்­வைக்­கப்­பட வேண்­டு­மென்ற அழுத்­தத்தை இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுத்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இம்­மு­யற்­சி­களின் பலன் எமக்கு கிடைக்க வாய்ப்­புண்டு. போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பாக கூறு­வ­தானால் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றுக்கு வரு­வ­தற்கு முன்­னமே தற்­போது குடா­நாட்டில் இடம்­பெற்­று­வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன் மக்கள் பய­மின்றி சென்று தமது உற­வி­னர்­க­ளுக்கு ஏற்­பட்ட அபத்­தங்­களை அநீ­தி­களை தெளி­வாக கூறு­கின்­றார்கள்.

இது முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டாகும். கடந்த அர­சாங்க காலத்தில் மக்கள் அச்­சத்­தினால் சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ர­வில்லை. அப்­படி அளித்தால் வெள்ளை வான் வந்து கடத்­திக்­கொண்டு போய்­வி­டு­மென்ற பயந்தான் அதற்கு காரணம். ஆனால் தற்­போது நடை­பெறும் விசா­ர­ணையில் மக்கள் துணிந்­த­வர்­க­ளாக யார் செய்­தார்கள் எப்­படி நடந்­தது சம்­ப­வத்தின் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என பய­மின்றி கூறி­யுள்­ளார்கள். இது பெரி­ய­தொரு முன்­னேற்­ற­மாகும். இந்த சுதந்­தி­ரத்தை தற்­போ­தைய அர­சாங்கம் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பது பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மாகும்.

எனவே தான் தமிழ் மக்­க­ளுக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வை இலங்­கை­ய­ர­சாங்கம் உட­ன­டி­யாக சாசன ரீதி­யாக வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்­வ­தேச சமூ­கத்­தையும் ராஜ­தந்­தி­ரி­க­ளையும் விந­ய­மாக கேட்­டுக்­கொள்­கின்றேன். விசா­ர­ணை­களின் முடிவில் நல்­ல­தொரு முடி­வையும் மேற்­படி சமூகம் எடுக்­கு­மெ­னவும் நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

யாழ். புலத்தில் ஒரு சில அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தாலும் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியே வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அதற்கு காரணம் கடந்த 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக இடம்­பெ­யர்ந்து வாழும் மக்­களை சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­ய­வில்லை. தமிழ் அர­சியல் கைதி­களை விரைவில் விடு­தலை செய்­வோ­மென்று புதிய அரசு வாக்­கு­றுதி அளித்­தது. அது நடை­பெ­ற­வில்லை. போரினால் பாதிக்­கப்­பட்ட வன்னி மக்­க­ளுக்கு உரிய வாழ்­வா­தாரம் உண்­டாக்கிக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இந்­திய மீன்­பிடி பட­கு­களின் எல்லை தாண்டல் கார­ண­மாக பெருந்­தொகை மீன­வக்­கு­டும்­பங்கள் வடக்கில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதே­வே­ளையில் கவ­லைக்­கு­ரிய விடயம் யாதெனில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் ஒற்­று­மை­யில்லை. இவர்கள் அனை­வரும் மக்­களின் நன்மை கருதி ஒன்று சேர்ந்து மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண ஒன்­று­பட வேண்­டு­மென்­பதே எமது மான­சீ­க­மான கோரிக்­கை­யாகும்.

உதா­ர­ண­மாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் அண்­மைக்­கா­ல­மாக மெல்­லிய தன­மாக முரண்­பாடு வளர்ந்­தி­ருப்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும். இந்த முரண்­பாட்டை நிவர்த்தி செய்து சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த யாரா­வது முன்­வர வேண்டும். என்­னிடம் பலர் கேட்­டார்கள் இப்­ப­ணியை தாங்­களே முன்­னின்று செய்­யுங்­க­ளென்று. நான் அவர்­க­ளுக்கு கூறினேன் தற்­போது தான் ஆயர் பத­வியை பொறுப்­பேற்று உள்ளேன். 

அது சார்ந்த கட­மை­களை செய்ய முடி­யாது இருக்­கி­றது. உரிய கட­மை­களை செய்து முடித்து விட்டு உரிய முயற்­சி­களை மேற்­கொள்வேன் என கூறி­யுள்ளேன். தற்­பொ­ழுது வட­கி­ழக்­கி­லுள்ள சகல மக்­களும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கவலை கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். கிடைத்­தி­ருக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தை இழந்து போகப்போகிறோமோ என்பது அவர்களின் கவலையாகும்.

வடக்கு முதல்வருக்கும் கூட்டமைப்புக்கிடையேயுள்ள உறவு நிலை விரிசல் சம்பந்தமாக நாங்கள் யாரையும் தனிப்பட்ட வகையில் குற்றம் சாட்ட முடியாது. குற்றம் சாட்டுவது அவசியமற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை தமிழ் மக்களின் நன்மை கருதியே அவர்கள் சிந்திப்பார்கள். இதேவேளை வடக்கு முதல் அமைச்சரை பொறுத்தவரை வடக்கில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளை காரசாரமாக அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறுவார். 

மற்றவர்கள் மென்தன்மையுடன் கூறும் விடயங்கள் முதல் அமைச்சர் நீதியரசராக பணிபுரிந்த காரணத்தினால் யதார்த்தமாக கூறுவது இயல்பு. உள்ளதை தனது பாணியில் அவர் கூறியிருக்கலாம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறு இருந்த போதும் இரு தரப்பினருக்குமிடையில் விரைவில் புரிந்துணர்வு ஏற்படுமென்று நம்புகின்றேன்.

கிராம இராஜ்ய திட்டத்தை உடன் வாபஸ் பெற வேண்டும் - சபையில் கூட்டமைப்பு கோரிக்கை

அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் 13ஆவது திருத்­தத்­துக்­குட்­பட்­ட­வாறு தற்­போது மாகாண சபை­களில் இருந்து வரு­கின்ற குறைந்­த­ளவு அதி­கா­ரங்­க­ளையும் பறித்­தெ­டுப்­ப­தா­கவே அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­படும் கிராம இராஜ்ய திட்டம் உள்­ளது.

இதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். கிராம இராஜ்ய திட்­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கடு­மை­யாக எதிர்க்­கி­றது. எனவே அர­சாங்கம் இதனை மீளப்­பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நேற்று சபையில் தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தது.

வடக்­கு, -­கி­ழக்கின் யுத்த இழப்­புக்­க­ளையும் அழி­வு­ க­ளையும் எழுந்­துள்ள தேவை­க­ளையும் மதிப்­பீடு செய்­யாது வடக்­கு-­, கி­ழக்கின் அபி­வி­ருத்­திக்­கென்றும் மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­த­லுக்­கென்றும் 2016 இல் இடம் பெறும் உதவி வழங்­குநர் மாநாட்டில் எந்த அடிப்­ப­டையில் பிர­தமர் நிதியைக் ­கோ­ரப்­போ­கின்றார்? இது பாரிய பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கின்­றது என்றும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது.

இதே­வேளை, வடக்­கு-­, கி­ழக்கில் இடம்­பெறும் மீள் குடி­யேற்றம், மீள­மைப்பு, அபி­வி­ருத்தி ஆகிய அனைத்து விட­யங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபைப் பிர­தி­நி­தி­க­ளையும் இணைத்துக் கொண்டு பணி­களை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் ஒத்­து­ழைப்­புக்­களை நல்க தயா­ரா­கவே உள்ளோம். வர­வு-­ – செ­ல­வுத்­

திட்­டத்தில் எமக்கு அதி­ருப்தி நிலை­யொன்று காணப்­பட்டு வரு­கின்ற போதிலும் பிரச்­சி­னைக்­கான தீர்வுஎன்ற பய­ணத்­திற்­காக நாம் அர­சாங்­கத்­தோடு முரண்­ப­டாது நிதி ஒதுக்­கீட்­டுச்­சட்­டத்­துக்கு எதிர்ப்­பி­னைக்­காட்­டாது செயற்­பட்டு வரு­கிறோம் என்றும் கூறி­யது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு - செல­வுத்­திட்­டத்தின் தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தகம், நிதி அமைச்­சுக்கள் மீதான குழு நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

2015 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கென 294 பில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் 2016ஆம் நிதி­யாண்­டுக்­கான வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்தில் பாது­காப்­புக்­கென மேல­தி­க­மாக 13 பில்­லியன் ரூபாவை அதி­க­ரித்து மொத்­த­மாக 307 பில்­லியன் ரூபாவை ஒதுக்­கீடு செய்­துள்­ளது.

வல்­லமை கொண்ட நாடு­களில் கூட பாது­காப்­புக்­கான நிதி­யா­னது திட்­டத்தின் மொத்த ஒதுக்­கீட்டில் 4 முதல் 7 வீத­மான தொகை­யி­னையே ஒதுக்­கீடு செய்து வரு­கின்­றது யுத்தம் ஒன்று இல்­லாத நிலையில் இங்கு 14 வித­மான நிதியை பாது­காப்­புக்கு ஒதுக்­கி­யி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதே­போன்று வடக்­கு-­கி­ழக்கு மாகா­ணங்கள் யுத்­தத்தில் பாது­காக்­கப்­பட்ட மக்­களைக் கொண்­டி­ருக்­கி­றது. எனினும் அந்த மாகா­ணங்­களின் அபி­வி­ருத்­திக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி­யா­னது மிக அற்­ப­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்டுக் கூறு­வோ­மானால், வடக்கின் அபி­வி­ருத்தி கட்­ட­மைப்­புக்­கென 16 பில்­லியன் ரூபாவே ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனாலும் கொழும்­பிற்கும் தெற்­கிற்கும் என அதி­க­ரித்த நிதி ஒதுக்­கீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. அதா­வது, எம்­மி­டத்தில் வரியைப் பெறு­கின்ற அர­சாங்கம் அத­னூ­டாக எமது பகு­தி­க­ளுக்கு செல­வி­டு­வதை விடுத்து அந்த நிதியை தெற்­கிற்­காக ஒதுக்கி கொண்­டுள்­ளது.

எமது வரிப்­ப­ணத்தை தெற்­கிற்­காக செல­வி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள அர­சாங்கம் வடக்­கு-­கி­ழக்கின் அபி­வி­ருத்­திக்கும் மீள் குடி­யேற்றம் உள்­ளிட்ட மீள்­கட்­டி­யெ­ழுப்­புதல் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் என 2016 இல் இடம்­பெ­ற­வுள்ள உதவி வழங்­குனர் மாநாட்டில் நிதி உத­வி­யைக்­கோரப் போவ­தாகக் கூறு­கின்­றது.

இது தொடர்பில் பிர­தமர் இன்றும் கூறி­யுள்ளார்.

யுத்­தத்தில் அழி­வுக்­குள்­ளான இழப்­புக்­களை சந்­தித்­துள்ள வடக்­கு-­கி­ழக்கின் உண்­மை­யான நிலை­வ­ரங்­களை மதிப்­பீடு செய்­யாத நிலையில் எந்த அடிப்­ப­டை­யைக்­கொண்டு உதவி வழங்­குனர் மாநாட்டில் பிர­தமர் உதவி கோரப்­போ­கிறார் என்­பது புரி­ய­வில்லை.

வடக்­கு-­கி­ழக்கில் அர­சாங்கம் மேற்­கொள்­கின்ற எந்­த­வொரு வேலைத்­திட்­டங்­களின் போதும் அதா­வது மீள்­கு­டி­யேற்றம், மீள­மைப்பு, அபி­வி­ருத்தி ஆகி­ய­வற்றை முன்­னெ­டுக்கும் சந்­தர்ப்­பத்தில் எமது மக்கள் பிர­தி­நி­தி­களும் இணைத்துக் கொள்­ளப்­ப­டுதல் முக்­கி­ய­மா­ன­தாகும். எம்­மையும் இணைத்து எமது ஆலோ­ச­னை­களும் உள்­வாங்­கப்­படல் வேண்டும்.

மேலும் தற்­போது கிராம இராஜ்யம் என்­ற­தொரு அறி­விப்பை மாகாண சபை­க­ளுக்கு அதனை நடை­மு­றைப்­ப­டு­வத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. இது வெறும் அறிக்கை ரீதி­யி­லான அறி­விப்­பா­கவே இருந்து வரு­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்­புச்­சட்­டத்தின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள குறைந்த பட்ச அதி­கா­ரங்­க­ளையும் இல்­லா­தொ­ழிக்­கவே செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே கிராம இராஜ்யம் செயற்­றிட்­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­கிய நாம் எதிர்க்­கின்றோம்.

அர­சாங்­கத்­தினால் எந்­த­வொரு திட்டம் முன்­வைத்­தாலும் அது நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் நன்மை பயப்­ப­தா­கவே இருந்­தாலும் மக்­களின் விருப்­பத்தை அறி­யாத எந்­த­வொரு திட்­டமும் வெற்­றி­ய­ளிக்­கப்­போ­வ­தில்லை. இதில் எமது மக்­க­ளுக்கு சந்­தே­கத்­துக்கு இட­ம­ளிக்க முடி­யாது. இருக்கும் அதி­கா­ரங்­களை குறைக்கும் திட்­டத்தை நாம் ஏற்கமாட்டோம்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அதன்பின்னர் வேண்டுமானால் இத்திட்டம் குறித்து பரிசீலிக்கலாம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பேரவை தீர்மானித்திருக்கின்ற நிலையில் இதனை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் எமக்கு அதிருப்தி காணப்பட்டு வருகின்ற போதிலும் கூட தேசிய பிரச்சினைக்கு தீர்வு அதிகார பகிர்வு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு செயற்பட வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது என்றார்.

தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றிற்கு சென்ற வடிவேல் சுரேஷ்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் சென்றுள்ளார். 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையிலேயே இன்று அவர் பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

எனினும் பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் பெற்றோல் போத்தல்களை பாராளுமன்றத்திற்குள் எடுத்துச் செல்லவிடாது அவரை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவையின் பேச்சுக்கு சிறிதரன் பதிலடி(காணொளி)

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில்

அனைத்து வாகங்களும் விசேட சோதனை….

 


 அதிவேக பாதையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் விசேட

யட்சன் படத்தின் முதல் நாள் வசூல்



ஆர்யா-கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் யட்சன். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தனர்.
-->