Home » , , » தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றிற்கு சென்ற வடிவேல் சுரேஷ்

தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றிற்கு சென்ற வடிவேல் சுரேஷ்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் சென்றுள்ளார். 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையிலேயே இன்று அவர் பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

எனினும் பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் பெற்றோல் போத்தல்களை பாராளுமன்றத்திற்குள் எடுத்துச் செல்லவிடாது அவரை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-->