Home » , » 82 பேர் உயிரை பறித்த சிலிண்டர்! பதற வைக்கும் வீடியோ

82 பேர் உயிரை பறித்த சிலிண்டர்! பதற வைக்கும் வீடியோ

உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் இதுவரை 80 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

 ஜபுவா மாவட்டத்தில் உள்ள உணவு விடுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


 மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. சிலிண்டர் விபத்தால் அருகிலுள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளன.இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளதோடு, பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 விபத்து குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் கூறுகையில், “சிலிண்டர் வெடித்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும் அதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இவ்விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது” என்றார். சிலிண்டர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-->